[ ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2012, 10:59.58 மு.ப GMT ]
ஐரோப்பாவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தடுத்து நிறுத்தக் கோரி, டென்மார்க்கில் போராட்டம் நடந்தது.
ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இங்கிலாந்து விரைவில் கிறிஸ்தவ நாடு என்ற நிலையில் இருந்து மாறிவிடும் சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது என மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் பிரான்சில் வாலிபர் ஒருவர் 7 பேரை சமீபத்தில் சுட்டுக் கொன்றார். விசாரணையில் அவர் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர் என்று தெரியவந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து மக்கள் டென்மார்க்கில் திடீரென போராட்டம் நடத்தினர்.
ஆரஸ் நகரில் நூற்றுக்கணக்கானோர் திடீரென திரண்டு இஸ்லாமியத்துக்கு எதிராக கோஷமிட்ட படி ஊர்வலம் சென்றனர். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு குழுவினர் போராட்டம் நடத்தினர்.
அப்போது இருதரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டினர்.
இதுதொடர்பாக 80க்கும் அதிகமானோரை கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், டென்மார்க், இங்கிலாந்து, ஜேர்மனி, சுவீடன், போலந்து உள்பட பல ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 300க்கும் அதிகமானோர் இஸ்லாமியத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
பேரணி சென்றவர்களை தடுத்து நிறுத்த 2,500க்கும் அதிகமானோர் திரண்டனர். இதனால் மோதல் ஏற்பட்டது. நிலைமை இப்போது கட்டுக்குள் உள்ளது என்றனர்.
வடகொரியாவில் எதிர்பார்த்ததைவிட அதிகமான ஏவுகணைகள் இருக்கக்கூடும் என்று ராணுவத்தைப் பற்றி எடுக்கப்பட்ட ஆய்வுக் குறிப்பில் இன்று தெரியவந்துள்ளது. [மேலும்]
தாயொருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட தாய்ப்பாலை பயன்படுத்தி சிறிய இரு பாதணிகளை உருவாக்கி பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் இருவர் புதுமை படைத்துள்ளனர். [மேலும்]
ஜேர்மனியில் ஹேம்பர்க்(Hamburg) நகரில், வாடகை வீடு வேண்டுவோருக்கு வீடுகளை ஒதுக்கித் தரும் கழகத்தின் தலைவரான ஹேன்ஸ் டயட்டர்(Hans-Dieter) தனித்து வாழும் பெண்களால் எங்களுக்குப் பெருந்தொல்லை என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
மலேசியாவை சேர்ந்த சோக் சில் தங் மற்றும் சின்சியூ லிங் என்ற தம்பதியினர் வீட்டில் கம்போர்டியாவை சேர்ந்த மெய் சிகான் லன்டலர் என்ற பெண், வேலைக்காரியாக பணியாற்றி வந்துள்ளார். [மேலும்]