நோர்வே நாட்டைச் சேர்ந்த எட்வர்டு மஞ்ச் என்பவரின் “The Scream” என்ற கலைப்படைப்பு ஏறத்தாழ 120 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.
கடந்த 1895ஆம் ஆண்டைச் சேர்ந்த இந்த ஓவியம், நியுயார்க் நகரத்தைச் சேர்ந்த நபர் ஒருவரால் ஏலத்தில் எடுக்கப்பட்டது. இந்த ஏலம் 12 நிமிடங்களில் நடந்து முடிந்தது.
இந்த ஏலத்தொகையைக் கொண்டு நோர்வேயில் புதிய அருங்காட்சியகம், விடுதி மற்றும் கலைக்கூடம் ஒன்றை உருவாக்கப் போகின்றனர்.
இதற்கு முன்பு பிகாசோ வரைந்த Nude, Green Leaves மற்றும் பஸ்ட் ஆகிய ஓவியங்கள் 106.5 மில்லியனுக்கு கடந்த 2010ஆம் ஆண்டில் ஏலத்தில் எடுக்கப்பட்டன.
இதற்கு அடுத்தபடியாக தற்போது தான் அதிகத் தொகைக்கு(119.9 மில்லியன் டொலர்) ஏலத்தில் ஓவியம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வடகொரியாவில் எதிர்பார்த்ததைவிட அதிகமான ஏவுகணைகள் இருக்கக்கூடும் என்று ராணுவத்தைப் பற்றி எடுக்கப்பட்ட ஆய்வுக் குறிப்பில் இன்று தெரியவந்துள்ளது. [மேலும்]
தாயொருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட தாய்ப்பாலை பயன்படுத்தி சிறிய இரு பாதணிகளை உருவாக்கி பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் இருவர் புதுமை படைத்துள்ளனர். [மேலும்]
ஜேர்மனியில் ஹேம்பர்க்(Hamburg) நகரில், வாடகை வீடு வேண்டுவோருக்கு வீடுகளை ஒதுக்கித் தரும் கழகத்தின் தலைவரான ஹேன்ஸ் டயட்டர்(Hans-Dieter) தனித்து வாழும் பெண்களால் எங்களுக்குப் பெருந்தொல்லை என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
மலேசியாவை சேர்ந்த சோக் சில் தங் மற்றும் சின்சியூ லிங் என்ற தம்பதியினர் வீட்டில் கம்போர்டியாவை சேர்ந்த மெய் சிகான் லன்டலர் என்ற பெண், வேலைக்காரியாக பணியாற்றி வந்துள்ளார். [மேலும்]