ஏனைய செய்தி
தீவு விவகாரம்: வியட்நாமை எச்சரித்த சீனா
[ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 04:52.22 மு.ப GMT ]
தென் சீனக்கடலில் உள்ள ஜிஷா, நன்ஷா தீவுகள் சீனாவுக்கு சொந்தமானவை, அவற்றை உரிமை கொண்டாடுவது சட்டவிரோதமானது என்று வியட்நாமுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யாங் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் சீனக் கடலில் உள்ள ஜிஷா, நன்ஷா தீவுகள் தொடர்பாக புதிய சட்டத்தை வியட்நாம் செயல்படுத்த கூடாது. அவ்வாறு செயல்படுத்தினால் அது இருநாடுகளுக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்தும்.

அந்த இரு தீவுகளும், சீன அதிகார வரம்புக்கு உட்பட்டவை. அத்தீவுகள் மற்றும் அவை சார்ந்த கடல் பகுதி தொடர்பாக எந்தவொரு நாடும் உரிமை கோரினால் அது செல்லத்தக்கது அல்ல என்பதோடு சட்ட விரோதமானதும் கூட என்று தெரிவித்துள்ளார்.

சீனாவால் ஜிஷா, நன்ஷா என அழைக்கப்படும் தீவுகளை, வியட்நாம் பாராசெல் தீவுகள் என அழைக்கிறது. அத்தீவுகள் தனக்கு சொந்தமானவை என உரிமை கொண்டாடும் வியட்நாம் இது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் “வியட்நாமிய கடல் சட்டம்” என்ற புதிய சட்டத்தை உருவாக்கியது.

இதன்படி, அந்த தீவுகள் வியட்நாமின் அதிகார வரம்புக்கு உட்பட்டவை என அறிவிக்கப்பட்டன. மேலும், புதிய மீன்வள வாரியம் உருவாக்கப்பட்டது.

அவ்வாரியத்துக்கு கடல் ரோந்துப் பணியில் ஈடுபடவும், சர்ச்சைக்குரிய அப்பகுதியில் வரும் கப்பல்கள் உள்ளிட்ட எவ்வகை வாகனங்களையும் சோதனையிடவும், விதி மீறல்களை விசாரிக்கவும் அதிகாரமளிக்கப்பட்டது. இச்சட்டம் ஜனவரி முதல் திகதியில் இருந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இதற்கு பதிலடியாக, சீனாவின் ஹாய்னன் மாகாணம் கடந்த நவம்பர் மாதம் கடல் பாதுகாப்பு தொடர்பான புதிய ஒழுங்காற்று விதிமுறைகளை உருவாக்கியது. தற்போது தென்சீனக் கடல் பகுதியில் தனது ரோந்துக் கப்பல்களை சீனா உலவ விட்டுள்ளது.

வியட்நாம் தவிர பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனே நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே தென் சீனக் கடலில் உள்ள தீவுகள் தொடர்பாக எல்லைப் பிரச்னை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
குழந்தைகளின் நிலை அறியாது கதறி அழும் பெற்றோர்: நெஞ்சை உலுக்கும் சம்பவம்
மகாத்மா காந்தியின் கடைசி உடமைகள் ரூ.2 1/2 கோடிக்கு ஏலம்
நான்கு இலட்சம் டொலர் பெறுமதியில் மின்னல் வேகத்தில் பறக்கும் புறா
ஆப்கனிஸ்தானில் பெண் குற்றவாளிகள் அதிகரிப்பு..!
நிலவுடன் மோதி பெரும் பள்ளத்தை ஏற்படுத்திய விண்கல்: நாசா தகவல்
இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பம்: அமெரிக்காவில் பரபரப்பு
கனடாவில் 1,00,000 டொலர்கள் மதிப்பிலான போதைப் பொருள்களை கைப்பற்றிய பொலிசார்
வங்கதேச கட்டிட விபத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை
கொன்ற குற்றவாளிகளின் உடல்களை பார்வைக்கு வைத்த சவூதி அரேபியா
சிரியாவிற்காகப் போரிடும் ஜிஹாதிகளுக்கு ஐரோப்பாவிற்குள் நுழைய தடை
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 02:48.02 மு.ப ]
20 வினாடிகளில் கையடக்க தொலைபேசிக்கு சார்ஜ் செய்யக்கூடிய கருவியைக் அமெரிக்க மாணவி கண்டுபிடித்துள்ளார்.   [மேலும்]
ஆடம்பரமாக வாழ்ந்ததால் கொலை: கனடாவில் அதிர்ச்சி
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:05.17 பி.ப ] []
கனடா நாட்டினர் கோஸ்டா ரிச்சாவுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும்படி அரசு எச்சரித்துள்ளது. [மேலும்]
பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்த கொடூர தாய்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:34.53 மு.ப ] []
கனடாவின் New Brunswick என்ற பகுதியில் 30 வயதான பெண் ஒருவர், தனக்கு பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்ததாக அதிரடியாக கைது செய்யப்பட்டார். [மேலும்]
மன்னரிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்: சுவாசிலாந்து இளம்பெண் கதறல்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:50.11 மு.ப ] []
சுவாசிலாந்து மன்னர் என்னை 14வது மனைவியாக்க துடிக்கிறார், எனக்கு புகலிடம் தாருங்கள் என்று பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார் அழகிய பெண்ணான நகோபெனி. [மேலும்]
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சவூதி பெண் சாதனை
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:13.32 மு.ப ]
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் சவூதி அரேபியா பெண்ணான ரஹா முஹாரக். [மேலும்]