அமெரிக்க செய்தி
ஒபாமாவின் கனவு மசோதா நிறைவேற்றம் (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 02 சனவரி 2013, 05:45.32 மு.ப GMT ]
பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்கும் மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது.

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக வர்ணிக்கப்படும் அமெரிக்கா தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

எனவே பணக்காரர்களுக்கு அதிக வரி விதிப்பது தொடர்பான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேல் சபையான செனட்டில் கொண்டு வரப்பட்டது. ஒபாமாவின் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் இந்த செனட்டில் அதிகளவு இருப்பதால், இந்த மசோதாவுக்கு ஆதரவாக 89 வாக்குகளும், எதிராக 9 வாக்குகளும் கிடைத்தன.

இதனையடுத்து இம்மசோதாவை பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் தொடங்கின. இந்த மசோதாவுக்கு குடியரசு கட்சிப்பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனை தொடர்ந்து துணை ஜனாதிபதி ஜோ பிடன், அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் சுமூக உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது.

இதன் பின் பிரதிநிதிகள் சபையில் இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நேற்றிரவு நடந்தது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக 257 வாக்குகளும், எதிராக 167 வாக்குகளும் கிடைத்தன. இரண்டு சபைகளிலும் ஒப்புதலை பெற்றுள்ளதையடுத்து, மசோதா ஜனாதிபதி ஒபாமாவின் ஒப்புதலோடு அமுலுக்கு வரும்.

இம் மசோதாவின்படி, தனிநபர் வருமானம் 4 லட்சம் அமெரிக்க டொலர்களுக்கு மேல் இருந்தாலோ அல்லது குடும்ப வருமானம் 4 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமாக இருந்தாலோ அவர்கள் பணக்காரர்களாக கருதப்பட்டு, அதிக வரி விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
துபாய் காவல்துறையினரால் பாலைவனத்தில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் மீட்பு
ஆப்கானிஸ்தானிலுள்ள இந்திய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு
பாகிஸ்தானிலிருந்து 45 இந்திய மீனவர்களை விடுதலை
பாகிஸ்தான் விமானத்தில் தீவிரவாதிகள்: நடுவானிலேயே சுற்றி வளைத்த பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள்
பிரிட்டன் மோசடிக்காரர் பிரான்ஸ் சிறையில் தூக்கு
ஜேர்மானிய பீரின் சுவை மாறக்கூடாது: மக்கள் எதிர்ப்பு
கஞ்சன்ஜங்கா மலைச் சிகரத்துக்கு சென்று திரும்பிய ஐவர் பலி
ஆண்களுடன் செக்ஸ் உறவு வைத்த ஆண்களிடம் இரத்ததானம் பெறுவதற்கு கனடா சுகாதாரத்துறை தடை
77 மில்லியன் பழமையான டைனோசர் கால் தடங்கள் கனடாவில் கண்டுபிடிப்பு
அந்தமானில் ஆதிவாசிகளை வேடிக்கை பார்த்ததின் விளைவு: சுற்றுலாப் பயணம் ரத்து
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மலேசியாவை உலுக்கிய நான்கு பேர் கொலை வழக்கு: 4 தமிழருக்கு மரண தண்டனை
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 07:39.47 மு.ப ] []
மலேசியாவில் பெண் உட்பட நான்கு பேரை கொடூரமான முறையில் கொலைச் செய்த தமிழர்கள் நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
உயிரை காக்க முகம் மாற்று அறுவை சிகிச்சை: 27 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சாதனை படைத்த டொக்டர்கள்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 07:17.45 மு.ப ] []
கல் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கி முகம் சிதைந்து உயிருக்கு போராடிய தொழிலாளிக்கு முகம் மாற்று அறுவை சிகிச்சை செய்து போலாந்து டொக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். [மேலும்]
10 ஆண்டுகளாக வீட்டுச் சிறையிலிருந்த 3 சகோதரிகளை மீட்க உதவிய அமெரிக்கருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 06:53.25 மு.ப ] []
அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்திலுள்ள கிளீவ்லேண்ட் பகுதியில் 10 ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 3 பெண்களை பொலிசார் கடந்த 6ம் திகதி மீட்டனர். [மேலும்]
மக்களுடன் பேருந்தில் பயணித்த இங்கிலாந்து ராணி
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:46.30 மு.ப ]
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்தார். [மேலும்]
லண்டனில் பயங்கரவாத தாக்குதல்: மேலும் 2 பேர் கைது
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:38.27 மு.ப ]
லண்டனில் இராணுவ வீரர் ஒருவர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்]