| | | |
| |
| | | |
| |
| நோர்வே செய்தி |
| அரசு அலுவலர்களை கொலை செய்ய திட்டமிட்டேன்: நோர்வே கொலைக் குற்றவாளி |
| [ வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2012, 05:59.07 மு.ப GMT ] |
நோர்வேயில் கடந்த வருடம் 77 பேரை கொன்றதை ஒப்புக்கொண்ட ஆண்டர்ஸ் ப்ரவீக், அந்நாட்டு முழு அரசாங்கத் தலைவர்களையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்தாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.2011ம் ஆண்டு சூலை மாதம் தலைநகர் ஒஸ்லோவில் பிரதமர் அலுவலகத்தை குறி வைத்தும் அரசாங்க கட்டிடத்தின் மீதும் ப்ரவீக், நடத்திய கார் குண்டுத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
அதன்பின்னர், யுதோயா தீவில் உள்ள இளைஞர் முகாமில் பொலிஸ் வேடத்தில் புகுந்து துப்பாக்கிக்சூடு நடத்தியதில் 69 பேர் பலியாகினர்.
இதுதொடர்பான வழக்கு நேற்று ஒஸ்லோ நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, தான் நடத்திய தாக்குதலில் முழு நோர்வே அரசாங்கத்தையும் கொல்வது என திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தார்.
அத்துடன் முன்னாள் பெண் பிரதமரான கிறோ ஹார்லெம் புரூன்ட்லண்டை பிடித்து அவரை சிறைச்சேதம் செய்து அக்காட்சியை இணையத்தில் வெளியிடத் திட்டமிட்டிருந்ததாகவும் ப்ரவீக் கூறினார்.
மேலும் தான் விளையாடிய 'கோல் ஒவ் டியூட்டி' மற்றும் 'மொடர்ன் வோர்பெயார்' ஆகிய வீடியோ கேம்கள் துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு பயிற்சியாக அமைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் குற்றவாளி ப்ரவீக்கு 21 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நோர்வேயில் மரண தண்டனை விதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| 10 ஆண்டுகளாக வீட்டுச் சிறையிலிருந்த 3 சகோதரிகளை மீட்க உதவிய அமெரிக்கருக்கு கிடைத்த அதிர்ஷ்டம் |
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 06:53.25 மு.ப ] [ ] |
அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்திலுள்ள கிளீவ்லேண்ட் பகுதியில் 10 ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 3 பெண்களை பொலிசார் கடந்த 6ம் திகதி மீட்டனர். [மேலும்] | | மக்களுடன் பேருந்தில் பயணித்த இங்கிலாந்து ராணி |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:46.30 மு.ப ] |
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்தார். [மேலும்] | | லண்டனில் பயங்கரவாத தாக்குதல்: மேலும் 2 பேர் கைது |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:38.27 மு.ப ] |
லண்டனில் இராணுவ வீரர் ஒருவர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்] | | அமெரிக்க புவியியல் போட்டியில் 12 வயது இந்திய வம்சாவளி மாணவன் முதலிடம் |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 10:26.55 மு.ப ] |
அமெரிக்காவில் உள்ள 'நேசனல் ஜியோகிராபிக்' என்ற அமைப்பு 'நேசனல் ஜியோகிராபிக் பீ' என்ற போட்டியை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகின்றது. [மேலும்] | | கணவர் இல்லாத போது பெண்கள் ஏசியை பயன்படுத்த கூடாது: சவுதி மதகுரு |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 07:09.41 மு.ப ] |
வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏசியை பயன்படுத்துவது ஒழுக்கமற்ற செயல் என்று சவுதியை சேர்ந்த இஸ்லாமிய மத குரு ஒருவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|