டென்மார்க் செய்தி
டென்மார்க்கின் முதல் பெண் பிரதமராக ஷ்மிட் தெரிவு
[ வெள்ளிக்கிழமை, 16 செப்ரெம்பர் 2011, 02:33.30 பி.ப GMT ]
ஹெல்லி தார்னிங் ஷ்மிட் டென்மார்க்கின் முதல் பெண் பிரதமராக பதவியேற்கவிருக்கிறார்.

அவரின் இடதுசாரி கூட்டணி தற்போதைய பிரதமர் லார்ஸ் ரோக்கே ராஸ்முசனின் கூட்டணியைத் தோற்கடித்துள்ளது. டென்மார்க்கில் நேற்று தேர்தல் நடந்தது.

இதில் ஹெல்லி தார்னிங் ஷ்மிட்டின்(46) டென்மார்க் சமூக ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றது. 4 கட்சிகள் கொண்ட இந்த இடதுசாரி கூட்டணி டென்மார்க் நாடாளுமன்றத்தில் உள்ள 179 இடங்களில் 89 இடங்களை கைப்பற்றியது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு இடதுசாரிகள் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாங்கள் தவறு செய்யமாட்டோம். இன்று புதிய சரித்திரத்தை எழுதியுள்ளோம் என்று ஷ்மிட் தெரிவித்தார்.

திருமதி. ஷ்மிட் கடந்த 1966-ம் ஆண்டு பிறந்தார். கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பயின்றார். பின்னர் புரூகஸில் உள்ள யூரோப்பியன் கல்லூரியில் படித்தார். டானிஷ் தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் ஆலோசகராக பணி புரிந்துள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டு சமூக ஜனநாயகக் கட்சி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2007ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஷ்மிட் கட்சி படுதோல்வி அடைந்தது.

தினசரி வேலை நேரத்தில் 12 நிமிடங்கள் அதிகரிக்க அவர் முடிவு செய்துள்ளார். இதனால் உற்பத்தி பெருகும் என்றும், அது நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இதை தற்போதைய பிரதமர் ராஸ்முசன் உள்ளிட்ட அரசியல் விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சன்னி-ஷியா பிரிவினரிடையே தொடர் வன்முறைக்கு 112 பேர் பலி..!
சுகாதாரம் இல்லாத உணவு விற்பனையால் தாய்க்கு தண்டனை வழங்கிய அதிகாரி..!
வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு ஜாமீன்
மனித வெடிகுண்டு தாக்குதலால் ஆப்கானில் 14 பேர் பலி
மேலாடை அணியாமல் நடமாடும் பெண்களுக்கு தண்டனை கிடையாது : நியூயார்க் கோர்ட் உத்தரவு..!
பாக்தாத் கார் குண்டு தாக்குதலில் 34 பேர் பரிதாபமாக பலி
6-வது முறையாக ஏவுகணை பரிசோதனை செய்த வடகொரியா மீது தென்கொரியா கண்டனம்
பாகிஸ்தான் : மறுவாக்குப்பதிவில் இம்ரான் கான் கட்சி வெற்றி
ரஷ்யா கார் குண்டு வெடிப்பில் 8 பேர் பலி
இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: பிரான்சின் முன்னாள் நிதியமைச்சர் ஜெரோம் சகுசாக்
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் பெரிய அதிசய மலர்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 01:39.27 பி.ப ] []
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் பெரிய மலர் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு பிரிட்டனில் பூத்துள்ளது. [மேலும்]
பூமியை நெருங்கும் ராட்சத பாறையால் பாதிப்பு ஏற்படாது: விஞ்ஞானிகள் கருத்து
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 08:41.49 மு.ப ]
விண்வெளியில் வருகின்ற 31ம் திகதி அன்று இரவு 9.59 மணிக்கு பூமிக்கு மிக அருகில் நெருங்கும் ராட்சத கல் பூமியை தாக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
நியூயார்க்கில் சக்கரம் இல்லாமல் இறங்கிய விமானத்தால் பரபரப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 03:34.02 மு.ப ]
அமெரிக்க நியூயார்க் சர்வதேச விமான நிலையத்திற்கு 34 பயணிகளுடன் அமெரிக்க ஏர்வேய்ஸ் விமானம் ஒன்று நேற்று வந்து இறங்கியது. [மேலும்]
அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது வடகொரியா
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:36.10 மு.ப ]
கடந்த பெப்ரவரி மாதம் வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தியமையால், கொரிய தீபகற்பத்தில் பதட்டம் ஏற்பட்டது. [மேலும்]
பிரான்சில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் நிறைவேற்றம்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 01:50.08 பி.ப ]
பிரான்ஸ் நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள சட்ட அங்கீகாரம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். [மேலும்]