பிரான்ஸ் செய்தி
மீண்டும் மாலியைக் கைப்பற்றுவோம் பிரான்ஸ் அறிவிப்பு
[ திங்கட்கிழமை, 21 சனவரி 2013, 03:57.33 பி.ப GMT ]
வடக்கு மாலியில் உள்ள இசுலாமியத் தீவிரவாதிகளை அப்புறப்படுத்த மாலி வந்து இறங்கிய பிரான்ஸ் இராணுவம் முழுமையாக இந்நாட்டை கைப்பற்றுவோம் என்று அறிவித்தது.
முன்பு மாலி ஃபிரான்சின் குடியிருப்பு நாடுகளில் ஒன்றாக இருந்தது.

இன்னும் சில வாரங்களில் மாலி முழுவதும் எங்களின் கட்டுபாட்டில் கொண்டு வருவதே இத்தாக்குதலின் இலட்சியம் என்று பிரான்சின் பாதுகாப்பு அமைச்சர் ஜீன் யேவ்ஸ் லீ டிரியான் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் மாலியின் வடபகுதியில் உள்ள இசுலாமியத் தீவிரவாதிகளை ஒழிக்க பிரான்ஸ் ராணுவத் தாக்குதலைத் தொடங்கியது. விமானத்தாக்குதலுக்கு பயந்து அங்கிருந்த அல்கொய்தா போராளிகளும் கூட்டாளிகளும் டயாபெலி நகரை விட்டு வெளியேறினர். பிரெஞ்சு படைகள் நியோனோ நகரத்தில் புதிய ராணுவத்தை அமைத்துள்ளது. இந்நகரம் தெற்கே 40 மைல் தொலைவில் உள்ளது நேற்று பிரெஞ்சுப்படைவீரா்கள் எவ்விதத்தாக்குதலிலும் ஈடுபாடமல் ஓய்வெடுத்தனர்.

நீண்ட போருக்கான திட்டமிடுதலில் ஈடுபட்டிருப்பதாக தளபதி ஃபிரட்ரெக் தெரிவித்தார். இன்னும் பல தகவல்கள் தேவைப்படுவதாகவும் அதற்காகக் காத்திருப்பதாகவும் கூறினார். டயாபலி நகரை விட்டுக் கிளம்பிய ஹமீது டோங்காரா பொதுமக்களில் ஒருவர்கூட இந்த போரில் கொல்லப்படவில்லை நம்பமுடியாவிட்டாலும் இதுதான் உண்மை என்று விவரித்தார். ஏனென்றால் பிரெஞ்சுப்படைகளின் தாக்குதல் தொடங்கியதும் போன திங்களன்று அக்கிம் படைகள் டயாபலி நகரை நோக்கி வந்தன.

அப்போது அங்கிருந்த மக்களிட் நாங்கள் முஸ்லீம்கள் நாங்கள் அல்லாஹவின் பெயரால் இங்கு வந்திருக்கிறோம் யாரையும் துன்புறுத்த மாட்டோம் என்று தெரிவித்ததை டுங்காரா நினைவுபடுத்தினார்.

அக்கிம் படைகள் டயாபலி நகரில் உள்ள மருந்துகடைகளில் புகுந்து அங்கிருந்த மருந்துகளை அள்ளிச்சென்றன. மக்களில் ஒருவரும் வெளியே வரக்கூடாது என்று எச்சரித்தனர் மீறி வந்த ஒருவரை சுட்டு தள்ளியதாக டங்காரா கூறினார்.

அபுபக்கர் மய்கா(35)என்பவர் இந்த தாக்குதல் பற்றிக்கூறும்போது, அல்ஜீரியர் லிபியா நாடுகளைச் சேர்ந்த துவாரெக் இனத்தவரே பெரும்பாலும் கொரில்லா தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறினார். இவர்கள் அனைவரும் முகத்தை மூடியிருப்பதால் அவர்களின் மொழிவழக்கை வைத்துதான் அவர்களை இனம்பிரித்தறிய முடியும் என்றார்.

மாலி படைகளைச் சோ்ந்த தளபதி செய்யது சொகோபா பொதுமக்களும் கலகக்கார்களுடன் கலந்திருப்பதால் இசுலாமியத் தீவிரவாதிகளைத் தனித்து வீழ்த்துவது கடினம் என்றார்.  

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
பூமியை நெருங்கும் ராட்சத பாறையால் பாதிப்பு ஏற்படாது: விஞ்ஞானிகள் கருத்து
கடனை திருப்பி கொடுக்காததால் வீட்டிற்கு தீ வைத்த திருநங்கை
தொலைத்த தன் பெற்றோரை கூகுளின் உதவியால் 23 வருடங்கள் கழித்து கண்டுபிடித்த வாலிபர்
4 சிறுநீரகங்களுடன் உயிர் வாழும் அதிசய பெண்
நியூயார்க்கில் சக்கரம் இல்லாமல் இறங்கிய விமானத்தால் பரபரப்பு
106வது வயதில் திருமண பந்தத்தில் இணைந்த அவுஸ்திரேலியா பெண்!
அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது வடகொரியா
21 குற்றங்களில் கீழ் கைதான கனடியர்
இந்தியப் பெண்ணை கொடுமைப்படுத்தி கற்பழித்தவருக்கு சிறை
அரியவகை சிவப்பு நிற வைரக்கல் ரூ.6 கோடிக்கு ஏலம்
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
வடகொரியாவில் வலம் வரும் 200 ஏவுகணைகள்: ராணுவ ஆய்வுக் குறிப்புகள்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 02:07.03 பி.ப ] []
வடகொரியாவில் எதிர்பார்த்ததைவிட அதிகமான ஏவுகணைகள் இருக்கக்கூடும் என்று ராணுவத்தைப் பற்றி எடுக்கப்பட்ட ஆய்வுக் குறிப்பில் இன்று தெரியவந்துள்ளது. [மேலும்]
தாய்ப்பாலில் பாதணிகள் உருவாக்கி புதுமை படைத்த பிரித்தானிய வடிவமைப்பாளர்கள்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:31.03 மு.ப ] []
தாயொருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட தாய்ப்பாலை பயன்படுத்தி சிறிய இரு பாதணிகளை உருவாக்கி பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் இருவர் புதுமை படைத்துள்ளனர். [மேலும்]
ஜேர்மனியில் தனித்து வாழும் பெண்களால் பெருந்தொல்லை: ஹேன்ஸ் டயட்டர்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:20.04 மு.ப ] []
ஜேர்மனியில் ஹேம்பர்க்(Hamburg) நகரில், வாடகை வீடு வேண்டுவோருக்கு வீடுகளை ஒதுக்கித் தரும் கழகத்தின் தலைவரான ஹேன்ஸ் டயட்டர்(Hans-Dieter) தனித்து வாழும் பெண்களால் எங்களுக்குப் பெருந்தொல்லை என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
வேலைக்கார பெண்ணை பட்டினி போட்டு கொலைச் செய்த கொடூரம்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:47.15 மு.ப ]
மலேசியாவை சேர்ந்த சோக் சில் தங் மற்றும் சின்சியூ லிங் என்ற தம்பதியினர் வீட்டில் கம்போர்டியாவை சேர்ந்த மெய் சிகான் லன்டலர் என்ற பெண், வேலைக்காரியாக பணியாற்றி வந்துள்ளார். [மேலும்]
வடகொரியா ஜனாதிபதிக்கு ரகசிய காதலி மூலம் பெண் குழந்தை: பரபரப்பு தகவல்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:05.22 மு.ப ]
வடகொரியாவில் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்ற கிம் ஜாங்-யுன்க்கு கடந்த 2009ம் ஆண்டு ரிகோல்-ஜி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. [மேலும்]