ஆப்ரிக்க நாடான அல்ஜீரியாவில், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பணைய கைதிகளில், பிரிட்டனை சேர்ந்த நான்கு பேரும், அமெரிக்கர் ஒருவரும் கொல்லப்பட்டு உள்ளனர்.ஆப்ரிக்க நாடான மாலியில், அல்-குவைதா ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதிகள், கயோ உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றினர். இந்த பயங்கரவாதிகளை சமாளிக்க, மாலி அரசு, பிரான்ஸ் நாட்டின் உதவியை நாடியது.
இதையடுத்து, மாலிக்கு விரைந்த பிரான்ஸ் படைகள், விமானம் மூலம் குண்டு வீசி, பயங்கரவாதிகள் கைப்பற்றிய பகுதிகளை மீட்டன. இந்த தாக்குதலில், 100க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பிரான்ஸ் நாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மாலியின் அண்டை நாடான, அல்ஜீரியாவில் உள்ள எண்ணெய் நிறுவனத்தின் மீது, பயங்கரவாதிகள், கடந்த வாரம் தாக்குதல் நடத்தினர். பிரிட்டன் நிறுவனத்துக்கு சொந்தமான, பல நிறுவனத்தில் பணிபுரிந்த, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாட்டை சேர்ந்த ஊழியர்கள், 50க்கும் அதிகமானவர்களை பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர்.
கடத்தல் காரர்கள் பதுங்கியிருந்த பகுதியில், அல்ஜீரிய ராணுவம், வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், 31 பயங்கரவாதிகளும், பணைய கைதிகள், 23 பேரும் கொல்லப்பட்டனர். இது குறித்து, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் குறிப்படுகையில், அல்ஜீரியாவில், பயங்கர வாதிகளின் படியில் உள்ள, பிரிட்டன் பணைய கைதிகள், மேலும் நான்கு பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 22 பேர் பாதுகாப்பாக நாடு திரும்ப விட்டனர் என்றார்.
அமெரிக்க வெளியுறவு அதிகாரி விக்டோரிய நூலந்த் குறிப்படுகையில், பயங்கரவாதிகளால் கடத்தி செல்லப்பட்ட பணைய கைதிகளில், அமெரிக்கர் ஒருவர் கொல்லப்பட்டு உள்ளார். மற்ற பணைய கைதிகளை பத்திரமாக மீட்பது குறித்து, அல்ஜீரிய அரசுடன் தொடர்பு கொண்டுள்ளோம் என்றார். |