| | | |
| |
| | | |
| |
| இத்தாலி செய்தி |
| பதவியை ராஜினாமா செய்தார் இத்தாலி பிரதமர் மரியோ மோன்டி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 23 டிசெம்பர் 2012, 04:48.15 மு.ப GMT ] |
இத்தாலி பிரதமர் மரியோ மோன்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். இவரது கடிதத்தை ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி ஜியார்ஜியோ நெபோலிடனா அறிவித்துள்ளார்.இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஜனாதிபதியை சந்தித்த மரியோ மான்டி ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
அதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, தொடர்ந்து காபந்து அரசின் பிரதமராக நீடிக்குமாறு மரியோ மான்டியை கேட்டுக்கொண்டார்.
அடுத்த கட்ட நடவடிக்கையாக நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பாக இரு அவைகளின் தலைவர்களிடம் ஜனாதிபதி ஆலோசனை நடத்தி முடிவு செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி விலகிய மரியோ மான்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆட்சியில் இருந்த கடந்த 13 மாத காலகட்டம் மிகவும் கடினமாகவும், வசீகரமாகவும் இருந்தது. நான் கொண்டு வந்த பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளை, அடுத்து பொறுப்பேற்கும் தலைவரும் முன்னெடுத்துச் செல்வார் என நம்புகிறேன்.
பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீளும் முயற்சியில் சர்வதேச அளவில் நம்பகமான நாடாக இத்தாலி மாறியுள்ளது என்றார்.
மரியோ மோன்டியின் அரசுக்கு அளித்த ஆதரவை முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியின் கட்சி திரும்பப் பெற்றது. இதையடுத்து, பெரும்பான்மை பலத்தை இழந்த மாண்டி தானாகவே முன்வந்து ராஜினாமா செய்து விட்டார். |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணச் சட்டத்தை எதிர்த்து எழுத்தாளர் தற்கொலை |
[ புதன்கிழமை, 22 மே 2013, 01:45.21 பி.ப ] [ ] |
பிரான்சில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர் திருமண அனுமதி சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து நாட்ரி டேம் கத்தீட்ரல் தேவாலயத்தில் எழுத்தாளர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். [மேலும்] | | அரியவகை யானை தந்தங்கள் துபாய் துறைமுகத்தில் பறிமுதல் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:50.14 மு.ப ] [ ] |
கள்ளத் தனமாக கடத்தப்பட்ட 259 யானை தந்தங்களை துபாய் துறைமுக சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். [மேலும்] | | 2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..! |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 06:28.29 மு.ப ] |
வருகின்ற மே மாதம் 31ம் திகதியன்று சுமார் 2.7 கி.மீற்றர் நீளமுள்ள விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லப் போகின்றது. [மேலும்] | | சவுதி அரேபியாவில் பொதுமக்கள் முன்னிலையில் 5 பேருக்கு தூக்கு தண்டனை |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 05:54.49 மு.ப ] |
சவுதி அரேபியாவில் பொது மக்கள் முன்னிலையில், ஏமனை சேர்ந்த 5 பேர் தூக்கிலிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] | | குழந்தைகளின் நிலை அறியாது கதறி அழும் பெற்றோர்: நெஞ்சை உலுக்கும் சம்பவம் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 02:23.45 மு.ப ] [ ] |
அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரை புரட்டி போட்ட சூறாவளிக்கு இதுவரையிலும் 91 பேர் உயிரிழந்தனர், 233 பேர் படுகாயமடைந்தனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|