பிரான்சில் இளைய மருத்துவர் சங்கம் தங்களின் பணிச்சூழல் மோசமடைந்து வருவதைச் சுட்டிக்காட்டி இந்த கிறிஸ்துமஸ் விடுமுறையில் போராட்டம் நடத்தத் துணிந்துள்ளது.இளைய பொதுமருத்துவருக்காக பிரெஞ்சு தேசிய கழகத்தைச் சேர்ந்த 1200 பேர், சனிக்கிழமை முதல் புத்தாண்டு தினம் வரை இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தில் கலந்து கொள்வர்.
இவர்களில் உறைவிட மருத்துவர்களும் பயிற்சி மருத்துவர்களும் அடங்குவர்.
இவர்கள் ஒரு நாளைக்குப் பத்துமணி நேரம் வரை வேலை பார்ப்பதால் குடும்பத்தை கவனிக்க முடியவில்லை என்று கவலைப்படுகின்றனர்.
இனி பணிநேரத்தில் மட்டும் மருத்துவபணியாற்றுவோம். தொலைபேசி அழைப்புக்கு செவி சாய்க்க மாட்டோம் என்று தெரிவித்தார்.
மருத்துவ சங்கத்தின் தலைவரான அலெக்ஸ்சாண்டர் ஹசன், இப்போராட்டத்தின் மூலமாக மருத்துவர்கள் நீண்டநேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலை, குறைந்த சம்பளம், கிராமபுறங்களில் போதிய வசதி வாய்ப்பு மற்றும் ஆதரவின்மை ஆகியவற்றை அரசுக்கு உணர்த்தப்போவதாக கூறினார்.
நிர்வாகப் பணிச்சுமைகளும் மருத்துவப் பணியைக் கூடுதல் சுமையுடைதாக்குகின்றன.
நோயாளிகளும் மகிழ்ச்சியாக இல்லை. மருத்துவர் நம்மை மருத்துவமனையை விட்டு வெளியேற்றிவிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்று நோயாளிகள் கருதுகின்றனர் என்றார் ஹசன்.
பிரான்சு சுகாதார அமைச்சகத்தின் அனுகூலமான பதிலை எதிர்பார்த்து மருத்துவசங்கம் காத்திருக்கிறது. |