பிரிட்டன் ராணி எலிசபெத்தின் கிறிஸ்துமஸ் செய்தி முப்பரிமாண(3டி) தொழில்நுட்பத்தில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.
கிறிஸ்துமஸ் தினத்தின் போது பிரிட்டன் ராணி நடத்தும் உரை மிகவும் பிரபலமானது.
கடந்த 1932ஆம் ஆண்டு முதல் பாரம்பரியமாக நடைமுறையில் உள்ள இந்த அரச குடும்ப வாழ்த்துச் செய்தி, தொடக்க காலகட்டத்தில் ரேடியோவில் ஒலிபரப்பானது.
அடுத்த கட்டமாக தொழில்நுட்ப வளர்ச்சியைப் பின் தொடர்ந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. முதல் முறையாக தொலைக்காட்சியில் நேரடியாக கிறிஸ்துமஸ் வாழ்த்து வழங்கிய பெருமையும் ராணி எலிசபெத்தையே சேரும்.
இப்போது அவரே 3டி-யில் வாழ்த்துச் செய்தி வழங்கியுள்ளார். அவரது வாழ்த்துச் செய்தி பக்கிங்ஹாம் அரண்மனையில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.
தனது கணவர், மகன், மகள்கள், பேரக்குழந்தைகளுடன் தேவாயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையிலும் ராணி எலிசபெத் பங்கேற்றார்.
தேவாலயத்தில் அவரை வரவேற்க காத்திருந்த 70 குழந்தைகளிடமும் மலர்க் கொத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களுடன் உரையாடி மகிழ்ந்தார். 89 வயதாகும் எலிசபெத், ராணியாகப் பொறுப்பேற்ற 60ஆவது ஆண்டு தினம் இந்த ஆண்டில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது நினைவுகூரத்தக்கது.
விண்வெளியில் வருகின்ற 31ம் திகதி அன்று இரவு 9.59 மணிக்கு பூமிக்கு மிக அருகில் நெருங்கும் ராட்சத கல் பூமியை தாக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]