நான் எந்த குற்றமும் செய்யவில்லை: நீதிமன்றத்தில் அழுத 77 பேரை கொன்ற கொலையாளி
[ செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2012, 01:01.52 மு.ப GMT ]
நான் குற்றவாளி அல்ல, தற்காப்புக்காகவும், நாட்டுக்காகவும் தான் கொலை செய்தேன் என நோர்வேயில் 77 பேரை சுட்டுக் கொன்ற கொலையாளி ஆண்டர்ஸ் ப்ரீவிக் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு ஜூலை மாதம் 22ம் திகதி நோர்வே தலைநகர் ஓஸ்லோ, உதோயா உட்பட பல்வேறு இடங்களில் துப்பாக்கியுடன் திரிந்த மர்ம நபர் 77 பேரை சுட்டுக் கொன்றார்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சொன்ன அடையாளத்தின் பேரில் ஆண்டர்ஸ் பேரிங் ப்ரீவிக்(வயது 32) என்ற நோர்வே இளைஞரை பொலிசார் கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓஸ்லோ நகரில் உள்ள அவரது வீட்டையும் பொலிசார் நேற்று சோதனையிட்டனர். ப்ரீவிக்கிடம் இருந்து தானியங்கி ஆயுதங்கள், கையெறி குண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இவன் மீதான வழக்கு 10 வாரங்களாக ஓஸ்லோ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று மீண்டும் விசாரணை தொடங்கியது. இதில் நடந்த வாதத்தின் போது ப்ரீவீக் கூறுகையில், சில மத அமைப்புகள் ஐரோப்பாவில் நுழைவதை தடுக்கவும், தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டேன். நான் ஒரு அப்பாவி, ஒரு குற்றம் செய்யவில்லை என்றான்.
இந்நிலையில் இன்று ஆண்டர்ஸ் பேரிங் ப்ரீவிக்கிற்கு மன நல சோதனை செய்ய உள்ளது. இதற்கான உத்தரவை நீதிபதி வென்ஜி எலிசபெத் ஆர்டசன் பிறப்பித்தார். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 21 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி என அரசு வழக்கறிஞர்கள் கூறினர்.
வேலை செய்யும் இடங்களிலேயே ஒரு தற்காலிக குடும்பத்தை உருவாக்கி வாழ்ந்து விட்டு, பின் வேலை முடிந்ததும் பிரிந்து விடும் தற்காலிக கல்யாண வாழ்க்கை முறை அதிகரித்து வருகின்றது. [மேலும்]