கனடாவை தாக்கிய பனிப்புயலால் 26,000 பேர் மின்சாரமின்றி தவிக்கின்றனர்.கனடாவை தாக்கிய பனிப்புயலால், தரையில் 20 செ.மீ உயரத்திற்கு பனி படர்ந்திருந்தது.
ஒண்டோரியாவின் கிழக்கிலும், கியூபெக்கின் மேற்கிலும் 26,000 பேர் மின்சாரமின்றி தவிக்கின்றனர்.
இதனால் ஹைட்ரோ கியூபெக், ஹைட்ரோ ஒன் மற்றும் ஹைட்ரோ ஒட்டாவா மின்சார நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் மின்வெட்டினால் பல சிரமங்களுக்கு உள்ளாயினர்.
ஹைட்ரோ ஒன் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் எட்டாயிரம் பேருக்கு மின்சாரம் கிடைக்கவில்லை. இவர்கள் ஒட்டாவாவின் கிழக்கிலும், மேற்கிலும் குறிப்பாக எம்ப்ரன் அருகே வசிப்பவர்கள் ஆவர்.
ஹைட்ரோ ஒட்டாவா நிறுவனத்திலிருந்து மின்சாரம் பெற்றவர்களும் பனிப்பொழிவு அதிகமானதால் மின்சாரம் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
மேலும் சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக ஒட்டாவா விமானநிலையத்திற்கு வந்த 20 விமானங்களும், அங்கிருந்து புறப்பட்ட 20 விமானங்களும் தாமதமாக இயக்கப்பட்டது.


|