டென்மார்க் செய்தி
மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் டென்மார்க் முதலிடம்
[ வெள்ளிக்கிழமை, 22 ஏப்ரல் 2011, 11:24.51 மு.ப GMT ]
எல்லா வகையிலும் நிம்மதியான வாழ்க்கை அமைந்துள்ளதாக அதிக மக்கள் கருதும் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் டென்மார்க் முதலிடம் பிடித்துள்ளது.

காலப் என்ற ஆய்வு நிறுவனம் 2010 குளோபல் வெல்பீயிங் என்ற பெயரில் 124 நாடுகளில் விரிவான ஆய்வு நடத்தியது. அதில் அன்றாட வாழ்க்கையில் திருப்தி, திணறல், அவதி என்ற 3 பிரிவுகளில் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 124 நாடுகளில் ஆய்வில் பங்கேற்ற மக்களிடம் தங்கள் தினசரி வாழ்க்கை அடிப்படையில் 0 முதல் 10 வரை மதிப்பெண் தர கேட்கப்பட்டது.

கடந்த 5 ஆண்டுகளில் 7 அல்லது அதற்கு அதிகமான மதிப்பெண் அளித்தவர்கள் அதிகம் கொண்ட நாடு பட்டியலில் முன்னிலை பெற்றது. 6 முதல் 4 வரை மதிப்பெண் அளித்தவர்கள் திணறல் மற்றும் 4க்கு குறைவாக கூறியவர்கள் அவதி ஆகிய பட்டியலில் இருப்பதாக கருதப்பட்டது.

மக்களின் நலம் அடிப்படையில் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலிடப்பட்டன. அவற்றில் டென்மார்க் முதலிடம் பிடித்தது. அந்நாட்டு மக்களில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் தங்கள் வாழ்க்கை சிறப்பாக இருப்பதாக கூறினர்.

69 சதவீதத்துடன் சுவீடன், கனடா இரண்டாவது இடம்பெற்றன. அவுஸ்திரேலியா 66 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. பின்லாந்து, வெனிசுலா(64), இஸ்ரேல், நியூசிலாந்து(63), நெதர்லாந்து, அயர்லாந்து(62), பனாமா(61), அமெரிக்கா(59) என அடுத்தடுத்த இடங்களை பிடித்தன.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
குழந்தைகளின் நிலை அறியாது கதறி அழும் பெற்றோர்: நெஞ்சை உலுக்கும் சம்பவம்
மகாத்மா காந்தியின் கடைசி உடமைகள் ரூ.2 1/2 கோடிக்கு ஏலம்
நான்கு இலட்சம் டொலர் பெறுமதியில் மின்னல் வேகத்தில் பறக்கும் புறா
ஆப்கனிஸ்தானில் பெண் குற்றவாளிகள் அதிகரிப்பு..!
நிலவுடன் மோதி பெரும் பள்ளத்தை ஏற்படுத்திய விண்கல்: நாசா தகவல்
இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பம்: அமெரிக்காவில் பரபரப்பு
கனடாவில் 1,00,000 டொலர்கள் மதிப்பிலான போதைப் பொருள்களை கைப்பற்றிய பொலிசார்
வங்கதேச கட்டிட விபத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை
கொன்ற குற்றவாளிகளின் உடல்களை பார்வைக்கு வைத்த சவூதி அரேபியா
சிரியாவிற்காகப் போரிடும் ஜிஹாதிகளுக்கு ஐரோப்பாவிற்குள் நுழைய தடை
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 02:48.02 மு.ப ]
20 வினாடிகளில் கையடக்க தொலைபேசிக்கு சார்ஜ் செய்யக்கூடிய கருவியைக் அமெரிக்க மாணவி கண்டுபிடித்துள்ளார்.   [மேலும்]
ஆடம்பரமாக வாழ்ந்ததால் கொலை: கனடாவில் அதிர்ச்சி
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:05.17 பி.ப ] []
கனடா நாட்டினர் கோஸ்டா ரிச்சாவுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும்படி அரசு எச்சரித்துள்ளது. [மேலும்]
பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்த கொடூர தாய்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:34.53 மு.ப ] []
கனடாவின் New Brunswick என்ற பகுதியில் 30 வயதான பெண் ஒருவர், தனக்கு பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்ததாக அதிரடியாக கைது செய்யப்பட்டார். [மேலும்]
மன்னரிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்: சுவாசிலாந்து இளம்பெண் கதறல்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:50.11 மு.ப ] []
சுவாசிலாந்து மன்னர் என்னை 14வது மனைவியாக்க துடிக்கிறார், எனக்கு புகலிடம் தாருங்கள் என்று பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார் அழகிய பெண்ணான நகோபெனி. [மேலும்]
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சவூதி பெண் சாதனை
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:13.32 மு.ப ]
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் சவூதி அரேபியா பெண்ணான ரஹா முஹாரக். [மேலும்]