டென்மார்க் செய்தி
வாலிபரை உயிருடன் கடித்து தின்றது புலி: உயிரியல் பூங்காவில் விபரீதம்
[ வியாழக்கிழமை, 12 யூலை 2012, 01:37.48 பி.ப GMT ]
டென்மார்க் வனவிலங்கு பூங்காவில் வாலிபர் ஒருவரை, உயிருடன் புலி கடித்து தின்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் வனவிலங்கு உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்கா 150 ஆண்டுக்கு மேல் பழமையானது. இங்கு பல அரிய உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இங்குள்ள கூண்டில் 3 சைபீரிய புலிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. பூங்கா ஊழியர் ஒருவர் நேற்று காலை புலிக்கு இறைச்சி போட சென்ற போது, அங்கு வாலிபர் ஒருவர் உடல் துண்டு துண்டாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். பொலிசார் விரைந்து வந்து வாலிபரை சிதைந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.

இதுகுறித்து பொலிஸ் செய்தித் தொடர்பாளர் லார்ஸ் போர்க் கூறியதாவது, புலிகள் பராமரிக்கப்படும் இடத்தின் சுற்றுச்சுவரை தாண்டி வாலிபர் எப்படி உள்ளே சென்றார் என்பது தெரியவில்லை.

வாலிபருக்கு 21 வயது இருக்கும். அவருடைய குரல்வளை, தொடை, முகம் போன்ற பகுதிகளில் புலிகள் கடித்து குதறியுள்ளன. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் புலி கூண்டுக்குள் சென்று விட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம்.

வனவிலங்கு பூங்காவில் உள்ள எல்லா கமெராக்களிலும் பதிவான காட்சிகளை ஆராய்ந்து வருகிறோம். பலியான வாலிபர் வெளிநாட்டை சேர்ந்தவர். டென்மார்க் குடியுரிமை பெற்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. வாலிபரை புலிகள் கொன்றுள்ளது மட்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

வனவிலங்கு பூங்கா மேலாளர் ஸ்டெப்பன் ஸ்ட்ராட் கூறுகையில், பூங்காவின் 152 வரலாற்றில் இதுவரை இப்படி நடந்தது இல்லை. புலி கூண்டுக்குள் நுழைய வேண்டும் என்று ஒருவர் நினைத்தால், அதை தடுக்க முடியாது.

இந்த சம்பவத்தால் பூங்கா பாதுகாப்பை மறு ஆய்வு செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

புலிகள் கொன்ற வாலிபரின் பெயர், அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்ற விவரங்களை பொலிசார் வெளியிடவில்லை.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
நீச்சல் குளத்தில் சிறுவன் மர்ம மரணம்
உளவு பார்த்ததால் ரஷ்யாவிலிருந்து அமெரிக்க தூதரக அதிகாரி வெளியேற்றம்
பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்த கொடூர தாய்
விண்வெளி ஆய்விற்கு செல்லும் முதல் பிரிட்டன் விண்வெளி வீரர்
முஷரப்பை மறுபடியும் நாடு கடத்த திட்டம்
மன்னரிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்: சுவாசிலாந்து இளம்பெண் கதறல்
பாகிஸ்தானில் இந்து ஒருவர் மர்ம நபர்களால் படுகொலை
பதவி விலக முடியாது: ஆசாத் திட்டவட்டம்
விண்ணுக்கு பறந்த எலி, பல்லி: வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சவூதி பெண் சாதனை
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் பெரிய அதிசய மலர்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 01:39.27 பி.ப ] []
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் பெரிய மலர் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு பிரிட்டனில் பூத்துள்ளது. [மேலும்]
பூமியை நெருங்கும் ராட்சத பாறையால் பாதிப்பு ஏற்படாது: விஞ்ஞானிகள் கருத்து
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 08:41.49 மு.ப ]
விண்வெளியில் வருகின்ற 31ம் திகதி அன்று இரவு 9.59 மணிக்கு பூமிக்கு மிக அருகில் நெருங்கும் ராட்சத கல் பூமியை தாக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
நியூயார்க்கில் சக்கரம் இல்லாமல் இறங்கிய விமானத்தால் பரபரப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 03:34.02 மு.ப ]
அமெரிக்க நியூயார்க் சர்வதேச விமான நிலையத்திற்கு 34 பயணிகளுடன் அமெரிக்க ஏர்வேய்ஸ் விமானம் ஒன்று நேற்று வந்து இறங்கியது. [மேலும்]
அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது வடகொரியா
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:36.10 மு.ப ]
கடந்த பெப்ரவரி மாதம் வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தியமையால், கொரிய தீபகற்பத்தில் பதட்டம் ஏற்பட்டது. [மேலும்]
பிரான்சில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் நிறைவேற்றம்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 01:50.08 பி.ப ]
பிரான்ஸ் நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள சட்ட அங்கீகாரம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். [மேலும்]