நோர்வே நாட்டில் ஆண்டர்ஸ் பேரிங் ப்ரீவிக்(வயது 32) என்பவர் நடத்திய தாக்குதலில் 77 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் கடந்தாண்டு ஜீலை மாதம் 22ஆம் திகதி நடந்தது. இந்த தாக்குதல்களில் பலியானவர்கள் பெரும்பாலும் பதின்ம வயதினராவர்.
இதன் ஓராண்டு நிறைவை நினைவு கூரும் விதமாக தேவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
நோர்வேயின் ஹெரோல்ட் மன்னரும், பிரதமர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பேர்க்கும் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர், நோர்வே மக்களின் மீது கடுமையான துயரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்ட போதிலும், நாட்டின் கலாச்சாரத்தை சுற்றி மக்கள் இணைந்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
நோர்வே தலைநகர் ஓஸ்லோவுக்கு அருகே உத்தேயா எனும் தீவில் நடந்த கோடை முகாமின் போது பலர் கொல்லப்பட்டனர்.
இன்னும் சிலர் துப்பாக்கி தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வடகொரியாவில் எதிர்பார்த்ததைவிட அதிகமான ஏவுகணைகள் இருக்கக்கூடும் என்று ராணுவத்தைப் பற்றி எடுக்கப்பட்ட ஆய்வுக் குறிப்பில் இன்று தெரியவந்துள்ளது. [மேலும்]
தாயொருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட தாய்ப்பாலை பயன்படுத்தி சிறிய இரு பாதணிகளை உருவாக்கி பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் இருவர் புதுமை படைத்துள்ளனர். [மேலும்]
ஜேர்மனியில் ஹேம்பர்க்(Hamburg) நகரில், வாடகை வீடு வேண்டுவோருக்கு வீடுகளை ஒதுக்கித் தரும் கழகத்தின் தலைவரான ஹேன்ஸ் டயட்டர்(Hans-Dieter) தனித்து வாழும் பெண்களால் எங்களுக்குப் பெருந்தொல்லை என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
மலேசியாவை சேர்ந்த சோக் சில் தங் மற்றும் சின்சியூ லிங் என்ற தம்பதியினர் வீட்டில் கம்போர்டியாவை சேர்ந்த மெய் சிகான் லன்டலர் என்ற பெண், வேலைக்காரியாக பணியாற்றி வந்துள்ளார். [மேலும்]