| | | |
| |
| | | |
| |
| இத்தாலி செய்தி |
| பாடம் நடத்துவதற்காக 2 முயல்களை உயிருடன் கொன்ற ஆசிரியருக்கு சிறைத்தண்டனை |
| [ வியாழக்கிழமை, 29 நவம்பர் 2012, 12:10.17 பி.ப GMT ] |
இத்தாலியில் வகுப்பறையில் 2 முயல்களை கொன்று பாடம் நடத்திய ஆசிரியருக்கு 8 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இத்தாலியை சேர்ந்தவர் கார்லோ ரேண்டோ, இவர் வகுப்பறையில் மாணவர்களுக்கு அனாடமி(உடற்கூறுவியல்) பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது 2 முயல்களை கத்தியால் அடித்து கொலை செய்து, அதை அறுத்து உடற்பாகங்களை காட்டி மாணவர்களுக்கு பாடம் நடத்தியதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து விலங்குகள் பாதுகாப்பு சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனாடமி பாடம் நடத்துவதற்காக ஆசிரியர் கார்லோ 4 முயல்களை வாங்கி உள்ளார்.
இதில் இரண்டு முயல்களை தப்பி ஓடின. அவற்றை துரத்தி பிடித்த ஆசிரியர், கத்தியால் குத்தி அடித்து கொலை செய்துள்ளார்.
பின் அதன் உடற்பாகங்களை எடுத்து மாணவர்களுக்கு விளக்கி காட்டி உள்ளார். இது காட்டுமிராண்டி தனமானது என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கில் ஆசிரியருக்கு 8 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விலங்குகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த பயாலஜிஸ்ட் மைக்கேல் குவான் கூறுகையில், அனாடமி வகுப்புகளில் விலங்குகளை அறுத்து பாகங்களை விளக்கும் முறை இல்லை. இது தேவை இல்லாதது. இதுபோன்ற கொடூரமான செயல்களை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார். |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆடம்பரமாக வாழ்ந்ததால் கொலை: கனடாவில் அதிர்ச்சி |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:05.17 பி.ப ] [ ] |
கனடா நாட்டினர் கோஸ்டா ரிச்சாவுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும்படி அரசு எச்சரித்துள்ளது. [மேலும்] | | பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்த கொடூர தாய் |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:34.53 மு.ப ] [ ] |
கனடாவின் New Brunswick என்ற பகுதியில் 30 வயதான பெண் ஒருவர், தனக்கு பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்ததாக அதிரடியாக கைது செய்யப்பட்டார். [மேலும்] | | மன்னரிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்: சுவாசிலாந்து இளம்பெண் கதறல் |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:50.11 மு.ப ] [ ] |
சுவாசிலாந்து மன்னர் என்னை 14வது மனைவியாக்க துடிக்கிறார், எனக்கு புகலிடம் தாருங்கள் என்று பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார் அழகிய பெண்ணான நகோபெனி. [மேலும்] | | எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சவூதி பெண் சாதனை |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:13.32 மு.ப ] |
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் சவூதி அரேபியா பெண்ணான ரஹா முஹாரக். [மேலும்] | | மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா: பதற்றம் அதிகரிப்பு |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:07.16 மு.ப ] |
ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளையும் மீறி, வடகொரியா மீண்டும் ஏவுகணைகளை பரிசோதித்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|